search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து மதிப்பு"

    • வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு ரூ.931.83 கோடி சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா குடும்பத்துக்கு ரூ.483 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் 3-வது கட்ட தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் குஜராத்தின் காந்தி நகர் மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.

    அதன்படி தனக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் என மொத்தமாக ரூ.36 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், ரூ.15.77 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகளும், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகளும் இருப்பதாக தெரிவித்துள்ள அமித்ஷா, தனக்கு ஆண்டு வருமானமாக ரூ.75.09 லட்சம் கிடைப்பதாக கூறியுள்ளார்.

    இதேபோல் ஆந்திராவில் மே 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் சட்டசபை தேர்தலில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு ரூ.931.83 கோடி சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் பெயரில் ரூ.895.47 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பெயரில் ரூ.36.35 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு 2019-ம் ஆண்டு இருந்ததை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திராவின் இந்துப்பூர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக களம் இறங்கும் முன்னணி தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா குடும்பத்துக்கு ரூ.483 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

    பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 3150% உயர்ந்துள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ₹13.46 லட்சமாக இருந்த நிலையில், தற்போது தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ₹4.10 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். டெல்லி, பெங்களூரு காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சூர்யாவின் மொத்த சொத்து ரூ.4.10 கோடியில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1.99 கோடி முதலீடு மற்றும் ரூ.1.79 கோடிக்கு மேல் பங்குகளில் முதலீடு ஆகியவை அடங்கும்.

    ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு தொடர்ந்து எம்பியாக தேர்வாகி வந்த அனந்த குமார் கடந்த 2018ல் உயிரிழந்த நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேஜஸ்வியை பாஜக களமிறக்கியது. இவர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-லிருந்து கட்சிக்கு வந்தவர்.

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் நெருங்கிய நண்பரான இவர், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராக இருந்திருக்கிறார்

    பெங்களூர் சட்ட ஆய்வுகள் கழகத்தின் முன்னாள் மாணவரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞருமான இவர், பா.ஜ.க தலைவர் மற்றும் பசவனகுடி ரவி சுப்ரமணியாவின் மருமகன் ஆவார். என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    • அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அரியலூர்:

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் கட்சி தலைவரான தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


    அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு அசையும் சொத்து ரூ.2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 93 உள்ளது என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.28 லட்சத்து 62 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக அவர் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார்.
    • தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாகவும், 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.

    இவ்வாறாக ரொக்கப்பணம், வங்கி கையிருப்பு என மொத்தம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தனது கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்கப்பணம், கையிருப்பு, கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.38.77 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.18.54 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார். ஆனால் இந்த முறை மொத்த சொத்து மதிப்பாக ரூ.57.32 கோடி காட்டியுள்ளார்.

    இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.27 கோடி வரை உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.17 கோடி அளவும், அசையா சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி அளவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரம் வருமாறு:-

    பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ.3 கோடியே 7 லட்சத்து 460. மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 22 லட்சம். கடன் ரூ.6.94 கோடி.

    மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ.8.99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ.1.58 கோடி.

    நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை. கடன் ரூ.1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230. அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம். வீட்டு கடன் ரூ.28 லட்சம்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு அசையும் சொத்தாக ரூ.2.86 லட்சம், தனி நபர் கடன் ரூ.40 ஆயிரம் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம், 88 கிலோ வெள்ளியும் உள்ளது.
    • இத்தாலியில் பரம்பரை வீடு உள்ளதாகவும், அந்த சொத்தில் கிடைக்கும் பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி வருகிற பராளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்காக கடந்த புதன்கிழமை (நேற்றுமுன்தினம்) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் மொத்த சொத்த மதிப்பு 12.53 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.

    கைவசம் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு (அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ஆகும்.

    2014-ல் அவருடைய சொத்து மதிப்பு 9.28 கோடி ரூபாயாக இருந்தது. 2019-ல் 11.82 கோடி ரூபாயாக அதிகரித்தது. தற்போது 2024-ல் 12.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

    அசையும் சொத்து 6.38 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். ஜூவல்லரி, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இருந்து கிடைக்கும் ராயல்டி, முதலீடுகள், பாண்டுகள், வங்கி டெபாசிஸ்ட், கையில் இருக்கும் ரொக்கத்தொகை ஆகியவை அடங்கும்.

    49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம் இருப்பதாகவும், 88 கிலோ வெள்ளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெள்ளியின் மதிப்பு 57.2  லட்சம்  ரூபாய் ஆகும்.

    இத்தாலியில்  பரம்பரை  வீடு உள்ளதாகவும், அவற்றில் தனக்கான பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார். 2014 தேர்தலில் இதன் மதிப்பு 19.9 லட்சம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.
    • ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.83 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டாலரை (ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

    சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைபிடித்துள்ளார். புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார்.

    அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. இதையடுத்து அவற்றின் ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி 20 சதவீதம் அதிகரித்து ரூ.1.348-க்கும், அதானி எனர்ஜி 16.38 சதவீதம் உயர்ந்து ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 சதவீதம் அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி என்டர்பிரைசஸ் 10.90 சதவீதம் உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 805-க்கும் வர்த்தகமாகின.

    இவ்வாறு புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது.
    • காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

    பெங்களூரு:

    நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன.

    இதில் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள். கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்கள்.

    இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக எம்.எல்.ஏ.வும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டி.கே.சிவகுமார் தேர்தல் ஆணையத்தில் அளித்த தகவல்படி அவரிடம் ரூ.273 கோடி அசையா சொத்துக்களும், ரூ.1140 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியிருந்தார்.

    2-வது இடத்தில் கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ.வும், தொழில் அதிபருமான கே.எச்.புட்டாசுவாமி கவுடா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1267 கோடி. இவருக்கு ரூ.5 கோடி மட்டுமே கடன் உள்ளது. 3-வது இடத்தை கர்நாடக சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ.வுமான காங்கிரசை சேர்ந்த பிரியகிருஷ்ணா உள்ளார். 39 வயதே ஆன இவரது சொத்து மதிப்பு ரூ.1156 கோடி. இவர் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ரூ.881 கோடிக்கு கடன் உள்ளவர்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவரது தந்தை எம்.கிருஷ்ணப்பா கர்நாடகாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார்.

    கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு 4-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.668 கோடி. கர்நாடகாவின் மற்றொரு எம்.எல்.ஏ. கலிஜனார்த்த ரெட்டி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 23-வது இடத்தில் உள்ளார்.

    கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களில் 32 பேர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். இவர்களில் காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

    அதே நேரத்தில் மிகவும் குறைந்த சொத்துக்களை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் சிந்து தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிர்மல்குமார் தாரா இடம்பெற்றுள்ளார். முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்துக்கள் வெறும் ரூ.1700 தான். இவருக்கு அடுத்த்அ இடத்தை ஒடிசாவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மகரந்தா முதுலிஒ பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் மட்டுமே. மேலும் ரூ.18 ஆயிரத்து 370 சொத்துக்களை கொண்ட பஞ்ச்சாபின் நரீந்தர்பால்சிங் சாவ்னா 3-வது இடத்திலும், ரூ.24 ஆயிரத்து 409 மதிப்பு சொத்துகளுடன் பஞ்சாப் நரிந்தர் கவுர்பராஜ் 4-வது இடத்திலும், ரூ.30 ஆயிரம் மதிப்பு சொத்துடன் சார்க்கண் எம்.எல்.ஏ. மங்கள் கலிந்தியும் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) முத்திரை பதிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.
    • பல நிறுவனங்களில் முதலீடும் செய்து உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான வீராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

    3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) முத்திரை பதிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.

    கிரிக்கெட் போட்டி, விளம்பரங்கள், சமூக வலைதள பதிவு ஆகியவற்றின் மூலம் அவர் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். உலகில் அதிக வருவாய் ஈட்டும் கிரிக்கெட் வீரராக அவர் திகழ்கிறார்.

    இந்நிலையில் வீராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக 'ஸ்டாக் குரோ' நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் வீராட் கோலி 'ஏ' பிளஸ் பிரிவில் உள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூ.7 கோடி வருமானம் கிடைக்கிறது. ஒரு டெஸ்டுக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும் 20 ஓவர் ஆட்டத்துக்கு ரூ.3 லட்சமும் பெறுகிறார். 20 ஓவர் கிரிக்கெட் லீக் மூலம் ஆண்டுக்கு ரூ.15 கோடி கிடைக்கிறது.

    விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். மேலும் பல நிறுவனங்களில் முதலீடும் செய்து உள்ளார். சமூக வலைதளங்களில் அவரை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி ஏழைகளின் பங்காளன் என்று கூறுகிறார்.
    • இவ்வளவு சொத்து மதிப்பை வைத்துக்கொண்டு அவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என பேசி வருகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணா ரெட்டி கூறியதாவது:-

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு கடந்த 2004-ம் ஆண்டு ரூ.1.70 கோடியாக இருந்தது.

    2009-ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் ரூ.77 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்து இருந்தார். 2011-ம் ஆண்டு ரூ.445 கோடியாக சொத்து மதிப்பு அதிகரித்தது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.510 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றதும் பல கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு வந்தது.

    அவரிடம் உள்ள கருப்பு பணத்தை கணக்கிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். இவ்வளவு சொத்து மதிப்பை வைத்துக்கொண்டு அவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என பேசி வருகிறார்.

    அப்படியானால் ஐதராபாத் தாமரை குளம், பெங்களூர் யலஹங்கா, தாடி பள்ளி கடப்பா, புலி வெந்துலா ஆகிய இடங்களில் உள்ள அரண்மனைகள் யாருடைய பெயரில் உள்ளது என்பதை ஜெகன்மோகன் ரெட்டி தெளிவுபடுத்த வேண்டும்.

    அந்த அரண்மனைகள் உங்களது பெயரில் இல்லை என்றால் எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் அனாதை இல்லங்களை நடத்திக் கொள்கிறோம்.

    ஜெகன்மோகன் ரெட்டி அணியும் செருப்பு புல்லோட்டி காம்போ என்ற நிறுவனத்தினால் முதலை தோலால் செய்யப்பட்டது.

    இதன் மதிப்பு ரூ.1.34 லட்சம். அவர் குடிக்கும் மினரல் வாட்டர் ஒரு பாட்டிலின் விலை ரூ.5,500. இப்படி விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி ஏழைகளின் பங்காளன் என்று கூறுகிறார்.

    அவருடைய சொத்து விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தேஜ்பிரதாப் யாதவிடம் ரூ.3 கோடியே 20 லட்சம் சொத்து உள்ளது.
    • மந்திரிகளில் பெரும்பாலானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக உள்ளனர்.

    பாட்னா :

    பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், தனது மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன்படி, அவர் உள்பட அனைத்து மந்திரிகளின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் பீகார் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    நிதிஷ்குமார் கையில் ரூ.28 ஆயிரத்து 135 ரொக்கமும், வங்கிகளில் ரூ.51 ஆயிரத்து 856-ம் உள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.16 லட்சத்து 68 ஆயிரம். அசையா சொத்துகள் மதிப்பு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம். மொத்த சொத்து மதிப்பு ரூ.75 லட்சத்து 53 ஆயிரம். ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் அதிகரித்துள்ளது.

    டெல்லியில் துவாரகா பகுதியில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் அவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது.

    லாலுபிரசாத் யாதவின் மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவிடம் ரூ.75 ஆயிரம் ரொக்கமும், அவருடைய மனைவி ராஜஸ்ரீயிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் உள்ளது.

    லாலுவின் மற்றொரு மகனும், சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான தேஜ்பிரதாப் யாதவிடம் ரூ.3 கோடியே 20 லட்சம் சொத்து உள்ளது.

    மந்திரிகளில் பெரும்பாலானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக உள்ளனர்.

    • டிரம்ப், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
    • 2011-21 காலகட்டத்தில் டிரம்ப் அமைப்பு ஏராளமான மோசடிகளை செய்துள்ளது.

    நியூயார்க் :

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். 2024-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களம் அமைத்து வருகிறார்.

    இந்த நிலையில் டிரம்பும், அவரது பிள்ளைகளும் வங்கிக்கடன்கள் வாங்குவதற்கும், குறைவான வரி கட்டுவதற்கும் ஏற்ற வகையில் டிரம்ப் அமைப்பின் சொத்து மதிப்பில் கோடிக்கணக்கில் பொய் சொல்லி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நியூயார்க் மாகாணத்தில் அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

    இதுபற்றி அரசு வக்கீல்கள் கூறும்போது, "2011-21 காலகட்டத்தில் டிரம்ப் அமைப்பு ஏராளமான மோசடிகளை செய்துள்ளது" என தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் தொடுத்துள்ள வழக்கில் குற்றவாளிகளாக டிரம்புடன் அவரது பிள்ளைகள் டொனால்டு ஜூனியர் இவாங்கா, எரிக் டிரம்ப் மற்றும் டிரம்ப் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான ஆலன் வெய்சல்பெர்க் மற்றும் ஜெப்ரி மெக்கனி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் கூறுகையில், "தனது பிள்ளைகள் மற்றும் டிரம்ப் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் உதவியுடன் டொனால்டு டிரம்ப் அநியாயமாக தன்னை வளப்படுத்திக்கொள்ளவும், அரசு அமைப்புகளை ஏமாற்றவும், தனது சொத்தின் நிகர மதிப்பை பில்லியன் கணக்கான டாலர்களை பொய்யாக உயர்த்தி கூறி உள்ளார். டிரம்பின் சொந்தக் குடியிருப்பான டிரம்ப் டவர் மதிப்பு 327 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,616 கோடி)என கூறி உள்ளனர். ஆனால் இந்த தொகைக்கு நெருக்கமாக நியூயார்க்கில் எந்த அடுக்கு மாடி குடியிருப்பும் விற்கப்படவில்லை" என தெரிவித்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை "இது மற்றுமொரு சூனிய வேட்டை" என்று கூறி டிரம்ப் நிராகரித்துள்ளார்.

    ×